Thursday, February 4, 2010

இன்று என்ன ?

ஒவ்வொரும் நாளும் போல் இன்றும் ஒரு நல்ல நாள். எழுந்தவுடன் ஊரைப் பற்றி நினைத்தேன். உழுதுண்டு ஊருக்கும் கொடுக்கும் உழவருக்கு நன்றி சொன்னேன். பெற்றோருக்கும் படைத்தவனுக்கும் வணக்கம் சொல்லி, உணவருந்தி, உலகத்தை எதிர் நோக்க வெளியே சென்றேன்.
பர பரவென பணி செய்தேன். பனியில் நடந்தேன், பாட்டு கேட்டேன். மீதி வேலையை மிக விரைவில் முடித்து வீட்டை நோக்கி விரைந்தேன். மனு முடித்து வைத்திருந்த வீடியோ பார்த்து வியந்தேன். சத்யநாராயண பூஜையில் சாஹிதியின்
சங்கீதம் கேட்டேன்.
இனியவள் கொடுத்த இரவு உணவுடன் இன்றையப் பொழுதும் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment